About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Sunday 23 December 2012

Article- cell organelles- 2. Plasma membrane




     Plasma membrane is otherwise called as cell membrane. It is the outer most covering of animal cell, human cell ..etc. In plants inside the cell wall this membrane is present. It gives shape and protection to the animal cell. It surrounds the cytoplasm of animal and plant cells. It is 7 to 9 nanometers thick.

Structure and functions of Plasma membrane:


                                                                                                       
                                                           



        According to the Fluid mosaic model plasma membrane is made up of proteins and lipids. The lipids are arranged in two layers. One layer is called as polar head region, facing outwards.


     These region  is  attractive towards water and containing phosphate. second one is non polar tail region is non attractive towards water and contains fatty acids are facing each other in the middle of the bilayer. This bilayer contains carbon and hydrogen.

Integral proteins:
      Usually they draw out and twist into threads from one side of the phospholipid bilayer. They are involved in transport of substances .


Peripheral proteins:


      They are arranged in the peripheral way these can move smoothly on a surface. They contain glycoproteins and cholestral . Glycoproteins sit on the one of the surfaces and collide with each other. Cholestral binds together in the plasma membrane reducing its fluidity.

Functions of plasma membrane:

     It gives shape to the cell and it has some functions.

A.Diffusion: 






   In this picture some particles are accumulated in the one corner of the bottle. By the process of diffusion the accumulated particles randomly move around the water, and uniformly organized. In this way transport of small molecules of water, corbon-di-oxide and oxygen can move across the plasma membrane by diffusion.


         B. Osmosis:

              Osmosis is a process in which movement of solvent from the less concentrated to the low concentrated solution through a semi permeable membrane and balance the two unequal concentrated solutions. Plasma membrane is semi-permeable in nature . Generally it is impermeable to large and polar molecules , ions , proteins, polysaccrides and permeable to non polar molecules like lipids , molecules like oxygen corbon- di- oxide and nitrogen.

        C..Endocytosis







                                      


               
        In  this process cells absorb molecules by engulfing them. It is used by all the cells for the transport of water , large objects.


There are three types of endocytosis.

1.Phagocytosis for the transport of actual particles.

2. Pinocytosis for the transport of water with molecules and

3.Receptor mediated endocytosis for importing molecules at low concentration.

         D. Exocytosis



                                  



         This process occurs to remove undigested substances from the cell organelles. In this process the undigested wastes containing food vacuoles is removed from the interior of the cell to the surface. The bilipid layers of plasma membrane rearrange themselves leave a passage and the food vacuoles are discharged its contents outside the cell.




 


 


 


 


Tuesday 18 December 2012

கவிதை- பதவி

                         





                                                                       
                            

 

           உன் முகம் தான் இப்பொழுதெல்லாம்

             பிரகாசமாக தெரிகிறது! நிலவைவிட!

           உன் சிரிப்பு மட்டுமே என் நினைவில்

              நிற்கின்றது  வெகுநாட்கள் கழித்து!
                                    
                 இரவுப் பகல் தெரிவதில்லை!
           
        உன்னை கண்விழித்துப் பார்த்துக் கொள்கையில்!

                  என் ஆயிரம் கவலைகள் மறந்தேன்!

           உன்னால் எனக்கு கிடைத்த அம்மா என்கிற

                           புதிய பதவியில்!           

சிறுகதை- முதல் நாள் பாடம்


 

 
 
 
                                                    
 
           ரம்யா!  சீக்கிரம்! என் கண்ணில்ல!  என்று  முதன் முதலாக பள்ளிக்கு  செல்லும் தன் மகளை கிளப்பத்  தயாரானாள்   லட்சுமி.
           இன்னைக்கி  என் பட்டுக்குட்டி   முதன் முதலா  ஸ்கூலுக்கு    போகப்போறாளாம்! சீக்கிரம் ! எழுந்திருமா! என்று எழுப்பினாள் .  இன்னைக்கி  மத்தக் குழந்தைங்க எல்லாம்  அழுதா  நீயும் அழக்கூடாது!  அம்மா கிளாஸ்க்கு வெளியேதான் நின்னுட்டு  இருப்பேனாம்!   ஒன்  அவர் கழிச்சு நம்ம வீட்டிற்கு  வந்துடலாம்!   என்றபடிகொஞ்ச நேரத்தில் மகளை கிளம்பிவிட்டாள்  .
 
      என்ன ரெண்டு  பேரும் கிளம்பிட்டீங்களா?  என்று  கேட்ட கணவனிடம்  கொஞ்சம் வேலையிருக்குங்க! என்றபடி தன் முதல் மகன் சுந்தரின்  பழைய  பேகில்  இருந்து ,பழைய சிலேட், பழைய வாட்டர் பாட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.  உனக்கென்ன  பைத்தியமா? நேத்திக்குதான் எல்லாம் புதுசு வாங்கினோம் ! என்று கத்தினார் கணவன்  சேகர்.  முதல்ல அதல்லாம்   ரம்யாக்கு  எடுத்துவை!
     கொஞ்சம் பொறுங்க! இப்படிதான் நம்ம  சுந்தர்க்கு  ஆசையாய்  வாங்கினோம்!
      என்னாச்சு! அம்மாகிட்ட  போணும்னே, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, எல்லாத்தையும் வீசி எறிஞ்சு, உடச்சு  கடசியில இது தெரியாம நானும் ,ஆயம்மாவும் புத்தம்  புதுசாச்சேன்னு  தேடி உடஞ்சதத்தான்  பத்து நிமிஷம் தேடி எடுத்தோம்!
      இவ அந்த அளவுக்கு பண்ணாம, ஆனா கிளாசில தொலசிட்டுதான்  வருவா! ரெண்டு  நாள் போகட்டும் !
      ஏன்னா! முதல்நாள் குழந்தைகளுக்கு மட்டும் இல்ல  பாவம்! டீச்சர், ஆயம்மா  எல்லாருக்கும் ஒரு சிரம்மமான நாள்தான்.
      அப்புறம்  முக்கியமானத நான்  மறந்திட்டேன் ! என்று  சுந்தரின் புக் லேபிளை  சின்ன சின்னதாய்  வெட்டி ஒவ்வென்றிலும்  ரம்யா  எல்.கே.ஜி .யென்று எழுதி  எல்லாவற்றிலும்  ஒட்டினாள்.  இது சீக்கிரமா தேட உதவும்  என்றாள்    லட்சுமி!
        முதல்நாளே! உன்னால நல்லாதான்  பாடம் படிச்சுட்டாங்க  உங்கம்மா! என்றார் கணவன்  சேகர்   தன் மகனைப் பார்த்து சிரித்தார் கிண்டலாக!!ஆமாம்பா! அம்மா நேத்திக்கே எல்லாம் சொன்னாங்க!  அண்ணா எத்தனை நாள்  உன் வாட்டர் பாட்டிலக் கேட்டேன்!  குடுத்தியா?  எப்படி! என்று சந்தோஷத்துடன்  பள்ளிக்கு  கிளம்பினாள்  ரம்யா!                 
 
 

     

Monday 3 December 2012

Cell organelles- 1.THE CELL WALL


                                                








             Cells  together  to   form  tissues   and  tissues  together to form  organs. Cells  are almost microscopic. Plants,fungi and  bacteria etc.. have cell wall. It  is  the  outer most covering of their  cells. Cell  wall   is  0.2 µm  thick.
          Animals and man do not  have cell wall.  It  is a  non living  layer.     It  gives   shape  and protection  to  the cell. It  separates  one cell to  another.

Cell wall
                                         

Structure  and  function:
                                                                                                                   

                  

            


            In  the  younger  stage  the   cell wall  is very  thin, delicate and   elastic   this   gives  the  cell wall  the  capacity  to  stretch . According  to the  age  of  cell wall    its  wall  increases  in  its  elasticity  and  thickness.  The  cell wall   is  formed  by  protoplasm . Cell wall is made up  of   substance called  cellulose, which  is  carbohydrate  having   carbon ,hydrogen  and   oxygen. The  cell  wall  consists of  three layers.There are many theories  about formation of  cellwall.


 1.The Middle lamella:

          It  is  the  outer most  layer  binds two  adjacent  cells  in which  wall formation  is yet  to be completed. It  laid  down  first. It   is rich  layer  in  pectin.


2.The   Primary cell wall:

 

                                   

 

 

 

             This  layer  is  generally  thin and  deposited inside the middle lamella layer. It  is  formed  while the  cells  are  growing. This  wall  is  made  up  of  carbohydrates. The major  carbohydrates  are  cellulose, hemicelluloses  and  pectin. The  outer  most covering   of  Primary cell  wall  of  plant  epidermis  is  usually  filled with  cutin and  wax  forming   permeability layer known  as  plant  cuticle. It  gives   protection from  water  and sunlight.

  3.The  secondary cell wall :

 

                    The secondary  cell wall    layer   is formed  inside the  primary wall after  the  cells are fully grown. It  strengthens  the  cell  wall because  of  presence  of   lignin. The  conducting  cells in  xylum  possesses  lignin. The  secondary  wall  contains  a compounds   like  polymers  that  made  up  of wood. That  includes  cellulose, xylum and  lignin.     The  lignin  it penetrates   the  cell wall  between  cellulose  hemicellulose  and pectin compounds  driving  out  water  and  strengthening  the cell wall. The  cell  wall  of  epidermis  and  endodermis   may  also contain cutin  that  protects it  from  herbivore.
             
         In  secondary cell  wall  there  are  cavities  varying  in  depth  and  depressions are  called  pits. Cell  to cell communication  is  possible through  pits that  allow  Plasmodesma.  Plasmodesma   are microscopic  channels which  traverse   the  cell  walls of   plant cell. There  are  two kinds  of  pits.  Simple  and  bordered  pits.

          Bordered  pits are  common in  the  gymnospermous  woods.  while  the  simple  pits  are common in  the  angiospermous  woods.
            The  cell  walls  in some  plant  tissues  contain rich  storage of  carbohydrates. That  can  be  used  for  metabolic   and growth needs  of  plants . Plant  cell wall  contain structural  protein  and  enzymes like hydrolases, esterases. In  grasses , the cell wall  become   silicified  due  to the deposition  of  silica  and  this   gives  rigidity  to the  leaf blades.
               Cell  wall  serves  as  a  protective layer  against  mechanical  stress. The  Primary  wall  of  the  most  plant  cell  is  semipermeable  and  permits the  passage of  small  molecules and  proteins. Water  and carbon-di- oxide  is   distributed  throughout the  plant  from  cellwall  to cell  and  PH  balance  is controlled  by  the  cell wall.

Saturday 1 December 2012

சிறுகதை-பழமை

பழமை



         
         என்னடா பண்றது? இந்த அப்பாவோட பெரிய தொந்தரவா போச்சு! எனக்கு என்னமோ இது சரியாக படலை! இப்பவே எல்லாரும் நம்மளப்பாத்து சிரிக்கற மாதிரி தோணுது!இந்த  தடவை  நம்ம தப்பிக்க முடியும்னு  எனக்குத் தோணல!.   இதப்போய் லேட்டஸ்டு ஃபேஷன்னுவேற ஊர்முழுக்க பீத்தல் வேற?     நாலுநாள் லீவுல என்னதான் செய்யறதுன்னு தெரியல!

           வாங்கடா! வாங்க! உங்களுக்கு நான் குடுத்த கெடு இன்னையோட முடியுது!இதுல மரியாதையா உங்களோட கையெழுத்தை மட்டும் போடுங்க!மத்தத உங்க பசங்களை வெச்சு என் வேலலைய நானே முடிச்சுக்கறேன். அவங்களுக்காவது, எந்த எந்த சொந்தம் எந்த ஊர்ல எந்த விலாசத்தில் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கட்டும்! என்ன  பொங்கல் வாழ்த்தில் கையெழுத்தைப் போடணும்! அவ்ளோதானே! என்று வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டனர் இருவரும். ஏண்டா, இந்த ரிட்டெர்ய்டு போஸ்ட் மாஸ்டரின் பசங்களாட நீங்க? இத்தனை சலிப்பு! பொங்கல், தீபாவளி இந்த வாழ்த்தோட ஆரம்பிச்சா எவ்ளோ சந்தோஷம் வரும் தெரியுமா? நீங்க ரெண்டுப் பேரும் என்னமோ எல்லாத்தையும் மறந்துட்டு உக்காந்திட்டு இருக்கீங்க!


           ஏண்டா! சுரேஷ்  நீ  பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி நான் ஆபிஸிலிருந்து எப்போ வருவேன்!? என்று வாசலில் காத்திருப்பாயே! உனக்கு நினைவு  இருக்கிறதா? ம்! நினைவு வருது அப்பா, உழவர், காளை மாட்டோடு,  சூரியனோடும் இருக்கறது, இயற்கைக்காட்சிகள் இவையெல்லாம்  மாமாக்கு, தாத்தாக்கு, சித்தப்பாக்கு, பெரியப்பாவுக்குன்னு நானும் இவனும் வகையார பிரிச்சு அனுப்பினதெல்லாம் நினைவுக்கு வருதப்பா!

            என்னை மன்னிச்சிடுங்கப்பா! என் பழைய நினைவை தூண்டி, நான் பெற்ற அளவில்லாத ஆனந்தத்தை என்னை மறுபடியும் அடைய வெச்சிட்டீங்க! ஆமாம்பா! நீங்க சொல்றது உண்மைதான் ஒருத்தருக்கு வாழ்த்து அனுப்பும்போதும், ஒருத்தர்கிட்ட இருந்து வாழ்த்து பெறும் போதும் அந்த ஆனந்தம் தனிதான் அப்பா!

           அப்பா! வாழ்த்து வாங்கப் போலாம் வாங்க! டேய்! இதையெல்லாம் இவ்வளவு நேரம் சுவாரஸியமாக கேட்டுக்கிட்டு இருக்காங்க பார்! என்  பேரக் குழந்தைகளை வாழ்த்துமடல் வாங்க கூட்டிக்கிட்டு போடா! என்றதுதான் தாமதம்! நாந்தான்  முதல்ல செலக்ட் செய்வேன்! நீ அட்ரஸ் மட்டும் தான் எழுதணும்!என்றக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.





 



Saturday 24 November 2012

கட்டுரை- என்னைக் கவர்ந்த பெண்மணிகள்!


                                                                                                          

1.அவ்வையார்( ிழ்ப்பற்று):

                  

           அவ்வையார்  தன் தமிழ்ப் பற்றால் திருமணம் புரிய விரும்பாமல் விநாயகப் பெருமானின் அருளால் தன் இளமைப் பருவத்தைத் துறந்து முதுமையை அடைந்தார் என்பது திரைப்படங்களின் வாயிலாக அறியப்படும் உண்மை. நடந்தே ஒவ்வொரு ஊருக்கும் சென்று  தன் தமிழ்ப் புலமையால் தமிழ்ப் பாட்டுக்களைப் பாடி மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதியமான் தனக்கு கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான்  உண்ணாமல் அதை அவ்வையாருக்கு குடுத்தார். இதிலிருந்து அவ்வையாரின் பெருமை விளங்கும். இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், விநாயகர் அகவல் போன்ற பலப் பாடல்களை எழுதியுள்ளார். உயிர் எழுத்துக்களை வரிசைப்படுத்தி இவர் எழுதிய ஆத்திச்சூடியால் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் அதிகம் இடம் பிடித்து உள்ளார்.

2.அன்னைத் தெரசா( சமூகத் தொண்டு):











       1910 ஆகஸ்ட் 26ம் தேதி மெஸிடோனியாவில் அன்னை தெரஸா பிறந்தார். சிறுவயதிலேயே ஆழ்ந்த இறைபக்தியும்,பொதுத் தொண்டில் ஆர்வமும் கொண்டவர். வெள்ளை நிறத்தில் நீல கரை உடுத்தி சேரிவாழ் மக்களுக்கும், அநாதைகளுக்கும், தொழுநோயாளிகளுக்கும், அவர் செய்த தொண்டுகள் அளப்பறியன. சுமார்  நாற்பத்தி ஐந்து  வருடங்கள் சமூகப் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடும்,தன்னம்பிக்கையோடும் செய்தார். தொழுநோயாளிகளுக்காக அவர் பெரிதும் பாடுபட்டார். அவர் செய்த தொண்டுகளுக்காக அவருக்கு 1962- பத்மஸ்ரீவிருது, 1979- நோபல் பரிசு, 1980-பாரத ரத்னா விருது, 1983-பிரிட்டீஷ் மகாராணியின் கவுரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன. 1997ல்  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இவருக்கு அமெரிக்காவின் கவுரவ  பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி கவுரவித்தார். தனக்கு பரிசாக வந்த எதையும் ஏலம் விடுத்து அதில் கிடைத்த பணத்தை அறக்கட்டளையில் சேர்ப்பது இவரின் இயல்பு. தன் வாழ்நாள் முழுவதும் எள்ளளவும் தன்னைப் பற்றி நினைக்காமல் சமூகத் தொண்டிற்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட அன்னைத் தெரசா இன்றும் உலக மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இவர் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்து விட்டவர்.

3.ஜானசி ராணி லட்சுமி பாய்( வீரம்):

 


                                                                   

 

 

 

           ஜான்சி ராணி லட்சுமிபாய் 1835 ல் பிறந்தார். வீரம் என்றால் அது ஜான்சி ராணி என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். இவரின் இயற்பெயர் மணிகர்ணிகா. சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். குதிரைஏற்றமும், வாள் வீச்சும் நன்கு கற்றார். அந்நாட்களில் வெகுவிரைவில் திருமணம் செய்துவிடுவர். ஜான்சியை ஆண்ட கங்காதர் என்பவரை 1842 ல் மணம்புரிந்தார். அவர் பட்ட துன்பங்கள் பல! தன் சொந்த வாழ்வில் குழந்தை, கணவனையும் இழந்தாலும் மனம் தளராது இரும்பு உள்ளம் கொண்டு தான் தத்து எடுத்த  தாமோதர் என்ற தனது உறவினரின் குழந்தையை  தனக்குப் பின்னால் குதிரையில் கட்டிக்கொண்டு நமது நாட்டிற்காக வெள்ளையர்களுடன்  போராடினார். தனது படைவீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடன் மிகத் துணிச்சலுடன் போர் புரிந்தார். 1858 ம் வருடம் ஜூன் மாதம் 17ம் தேதி போர் முனையில் காயம் அடைந்து வீர மரணம் அடைந்தார். அப்பொழுது அவருக்கு வயது 22 மட்டுமே! வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி  பெண்கள் படை உருவானபோது  அதற்கு ஜான்சிராணி படை என்றுப் பெயரிட்டார்.
இதிலிருந்து அவர் பெருமை விளங்கும்.

4.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: (பெண்களுக்காகப் போராடியவர்).


                                                   

                                     
                                                     


         பெண்களுக்கு கல்வி எதற்கு? என்ற காலக்கட்டத்தில் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி.இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் என்ற ஊரில் 1886ல் பிறந்தார். இவருக்கு இரண்டு தங்கைகள், ஒருத் தம்பி. ஆரம்பத்தில் திண்ணைப்பள்ளியில் படித்த இவர் மெட்ரிக்குலேசன் பத்தாம் வகுப்பில் அதிக  மதிப்பெண் பெற்ற முதல் மாணவி, ஒரே மாணவி இவர் ஆவார். அரசின் உதவித் தொகையில் வெளிநாடு சென்று  உயர் கல்வி பெற்ற முதல் பெண்,சட்டசபையில் அங்கம் வகித்த முதல் பெண், இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்த ஒரேப் பெண் என்ற பல பெருமைகளைக் கொண்டவர். இவர் அனாதைக் குழந்தைகளுக்கு அவ்வை இல்லம் அமைத்தார்.புற்று நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் அடையாறு புற்று நோய் மருத்துவமனை அமைத்தார். 1925 ல் சட்டசபைத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பெண்களுக்காக தேவசாசிமுறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம், பால்யவிவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தார். இவர் பத்மவிபூஷன் விருது பெற்றவர்.

5.திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி( சங்கீதம்):

                                                        



         எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்கள் 16,1916 ல் பிறந்தார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு,வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருத மொழி, குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தன் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளார்.இவர் சங்கீத கலாநிதி-1968,மகசேசே பரிசு-1974, பத்மவிபூஷன்-1975 , நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது- 1990, பாரத ரத்னா- 1998. போன்ற பல விருதுகளை தன் இசைப் பணிகளுக்காகப் பெற்றார்.  நம் வீட்டில் அன்றாடம் கேட்கும் இவர் பாடிய வெங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் போன்றவை புகழ்பெற்றவை.

 

6. டாக்டர் பத்மாசுப்ரமணியம் ( நடனம்):

 

 

  

           இயக்குனர் கே.சுப்ரமணியம், மீனாட்சி   தம்பதியருக்கு கடைக்குட்டி இவர் ஆவார்.அம்மா மீனாட்சி ஒரு இசைக் கலைஞர் ஆவார். இவரை மயிலாப்பூர் எழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்க அனுப்பினார்கள். இவர் ஆடாத உலக மேடைகள் இல்லை எனலாம். இவரின் தந்தை 1942ல் ஆரம்பித்த நடனப்பள்ளி நிருத்யோதயா இவரின் அயராத உழைப்பால் 70ம் ஆண்டை அடிஎடுத்து வைத்திருக்கிறது.
       நடனத்தில் புதுமை விரும்பியான  இவர் ரஷ்ய மியூசிக் கம்போசர் ஒருவரின் இசைத் தொகுப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி ராமாயண ஜடாயு மோட்சத்தை  ரஷ்யாவில் நடத்திக் காட்டிய போது நடனப் பிரியர்கள் ஆனந்தத்தில் மிதந்தனர்.  இது அவருடைய நடனத் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
          ஐம்பது  ஆண்டுக்காலமாக தன் வாழ்நாளை நாட்டியற்திற்காகவே அர்ப்பணித்தார்.
       இவருக்கு பாடலுக்கு இசைஅமைத்தல், ஆராய்ச்சிசெய்தல் போன்ற பல  திறமைகள் உண்டு. இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி விருது உட்பட  முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன.

7.    கவிஞர் சூடாமணி  (எழுத்தாளர்):

 

                                                            

                          

                  ஜனவரி 10,1931-ல் பிறந்த இவர் ஏராளமான சிறுகதைகளையும்,புதினங்களையும் எழுதியுள்ளார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக்கதிர், கல்கி, விகடன் என்று எல்லாப் பத்திரிக்கைகளிலும் சூடாமணி எழுதியுள்ளார்.தமிழில்  மட்டுமல்லாமல் சூடாமணி  ராகவன் என்றப் பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதை காவேரி என்றப் பெயரில் 1957ல் பிரசுரம் ஆனது. இருவர் கண்டனர் என்ற இவரது நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற சூடாமணி அவர்கள் ஆரவாரம் இல்லாமல் மிக எளிமையாக, மத்திய தர வாழ்கையையும், அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்.இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது நான்காவது ஆசிரமம் என்ற சிறுகதைக்காகப் பெற்றார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதம் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.

8.மேடம்க்யூரி( அறிவியலுக்கான நோபல் பரிசுப் பெற்றவர்):


                                                                   

                                                                  


ரேடியம், பொலோனியம் போன்ற கதிர் வீச்சு மூலகங்களை கண்டுப்பிடித்தார் மேரிகியூரி. 1896ல் இவர் தொடங்கி வைத்த கதிர்வீச்சு ஆராய்ச்சி மருத்துவத் துறையில் மகத்ததாக இன்றளவும் போற்றப்படுகிறது.
 

          இவர் போலந்து நாட்டில் 1867ம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி தன்   குடும்பத்தின் ஐந்தாவதுக் குழந்தையாகப் பிறந்தார். இவர் தந்தை இயற்பியல் ஆசிரியர். அன்னை  ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை. அதனாலேயே  இவருக்கு தன் தந்தையைப் போலவே இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்டார். அதிக வசதி இல்லாத தனது குடும்ப  சூழ்நிலையால் பல சிரமங்களுக்கு நடுவே இவரது  கல்விப் பருவம் தொடர்ந்தது. 1893 ல் முதல்  மாணவியாக எம்.எஸ்.சி இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். அடுத்த ஆண்டு எம்.எஸ்.சி கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். தன் வாழ்நாள் முழுவதையும் ஆராய்சிக்காகவே செலவழித்தார்.  
 
 
           இவர் பியூரிக் கியூரியை திருமணம்  செய்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து ரேடியத்தைக் கண்டுப்பிடித்தனர். இவருக்கு நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, இரு தடவை நோபல் பரிசுப் பெற்ற ஒரே ஒருப் பெண் மற்றும் விஞ்ஞானத்தின் பல்வேறுத் துறைகளில்( இரசாயனம், இயற்பியல் )நோபல் பரிசுப் பெற்ற ஒரே ஒரு நபர்  எனும் மூன்று பெருமைகள் உண்டு. மேலும் இவரது மகள் ஐரின் கியூரியும் 1935 ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசை பெறுவது  இவர் குடும்பத்திற்கே சாத்தியம். இதுவரை இதனை யாரும் முறியடிக்கவில்லை என்பது அவருக்கு மிக பெருமைச் சேர்க்கிறது.

9. வங்கிரி   மாத்தாய்    ( சுற்றுச்சூழல்):

                                    

 

            1940 ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் தேதியில் கென்யாவில் நைரி  மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் பிறந்தார். 1964 ல் உயிரியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றவர். 1966 ஆண்டு பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1971 ம் ஆண்டு நைரோபி பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் மத்திய ஆப்ரிக்காவின் முதலாவது கலாநிதி  பட்டம் பெற்ற பெண்மணி என்றப் பெருமையைக் கொண்டவர். சுற்றுச்சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றிற்கும் இவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆப்ரிக்க பெண்மணி இவர் ஆவார்.இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆகவும், சூழல் மற்றும் இயற்கை வன,  வளத்துறைக்குரிய அமைச்சராகவும் விளங்கியவர். இவர் 1977ல் The Green Belt  இயக்கத்தினை  ஆரம்பித்தார். இவ்வியக்கம் இதுவரையில் 10 மில்லியனுக்கும் மேலாக மரங்களை நட்டுச் சாதனைப்  புரிந்து உள்ளது. மண்ணரிப்பைத் தடுத்து அதே சமயம் சமைப்பதற்குரிய விறகுகளைப் பெறுவதே இதன் நோக்கம். இந்த அமைப்பின் செயல்பாடுகள் யாவும் கென்யாக் கிராமங்களில் வாழும் பெண்களாலேயே பெரும்பாலும் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.