About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Sunday 24 February 2013

சிறுகதை- டாக்டர் நேரம்



                                    



         அந்த ஆஸ்பத்ரிக்கி  நான் போகும் போது அதிக நோயாளிகள் இல்லை. என்ன சார்? டோக்கன் வாங்குங்க!  என்று நர்ஸ் கத்தபடி என் பேரை எழுதிக் கொண்டார். நான் என்ன சிஸ்டர்? ஏன் குரல் டல்லா இருக்கு? நல்லா சாப்பிடுங்க! என்றேன்.
          அவருக்கு முகம் பிரகாசம் ஆனது. தேங்கஸ் சார்! என்று உற்சாகத்துடன் வேலைப் பார்த்தார்.
           ஒன்று இரண்டு மூன்று என வரிசையாய் சென்றுக் கொண்டிருக்க டாக்டரின் முகத்தில் சந்தோஷம் இல்லை. என்ன சார் ? காய்ச்சலா? என்றேன் அருகில் இருந்தவரிடம்! ஆமா சார் ஒரு வாரம் ஆச்சு! வேலைக்கிப் போக முடியல என்றார் கவலையில்! கொஞ்ச நேரத்தில் கூட்டம் வந்தது. சிலர் இன்றைய பொழுது ஓடிவிடும்! என்று புக்கு படிக்க இருக்கா? என்று பெரிய புக்காக வாங்கி சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தனர். சிலர் இன்னும் எவ்ளோ பேர் இருக்காங்க? என்று முள்ளின் மேல் நிற்பதைப்  போல் நர்சிடம் ஒவ்வொரு அரைமணிக்கும்  கேள்வி கேட்டனர்.
       எனக்கு பின்னால் வர வேண்டிய  பெண்மணி தன் இரண்டுக் குழந்தைகளை வைத்துக் கொண்டு   கவலையில் உட்கார்ந்துக் கொண்டிருக்க இந்தாங்க! பாவம்!எனக்கு அவசரம் இல்லை. உங்க டோக்கனை குடுங்க! என்று அவர் டோக்கனை வாங்கிக் கொண்டேன். அவர் முகத்தில் அத்தனை  சந்தோஷம்! என்னமோ ஒரு வீட்டை நான் ஃபிரியாக குடுத்தது மாதிரி மகிழ்ந்தார்.

       என்ன சார்? லேடீஸ்க்கு மட்டும் தான் நீ வாங்கின டோக்கனைத் தருவீங்களா? எங்களுக்குத் தர மாட்டீங்களா ?என்று 28ம் டோக்கனை வைத்துக் கொண்டு ஒருவர்  துக்கத்தில் கேட்க கேட்க சரி! என்று குடுத்துவிட்டேன். அவர் சாமியைப் பார்ப்பதுப் போல் மிகச் சந்தோஷமாய் உள்ளே நுழைந்தார். என்ன சார்  4 லிருந்து 28ம் நம்பருக்கு போயிட்டீங்க?! என்று நர்ஸ்  கேட்டது எனக்கு மிகவும் பிடித்தது.
       ஒரு வழியாக எல்லாரும் கடைசியாக போன போது என் முறை வந்தது.  டாக்டரிடம் சார் தப்பா நினச்சுக்காதீங்க?  உங்களுக்கு லவ் மேரேஜா? அரேண்ஜ்டு மேரேஜா என்றேன்? சிரித்துக் கொண்டே  அரேண்ஜ்டு மேரேஜ் என்றார். உங்களுக்கு என்ன என்ன உணவு வகைகள் பிடிக்கும் என்றேன்  மிகவும் சந்தோஷமாக பதில் சொன்னார். என்ன சார் இவ்ளோ கடைசியா வந்தும் ஜாலியா  இருக்கீங்க? என்றார் டாக்டர். ஆமாம் சார்! ஒருப் பத்து பேருக்கு முன்னாடிதான் வரலான்னு நினச்சேன் முடியல!  நீங்களும் ஒரு முக்கால் மணி முன்னாடியே ரிலாக்ஸ் ஆயிருப்பீங்க? என்றேன்.  என்ன சார்  என்னால உங்களுக்கு  இன்னிக்கி  சந்தோஷம் கிடச்சிச்சா? என்றேன் .ஆமாம் என்றார். எனக்கு ஒன்னும் இல்ல! என்னமோ இன்னைக்கி  இந்த ஹாஸ்பிடலில் இருக்கறங்க எல்லாம் சந்தோஷமாக  இருக்கறமாதிரி இருக்காங்க! என்று விரைந்தேன்  நான் ஒரு   டாக்டர் என்பதையும் மறந்து!

Friday 22 February 2013

கவிதை- இருட்டு



 


                                                                
                                                                                                                                                   

                         அந்த இருட்டுக்கு

                         சக்தி அதிகம்தான்!

                        எல்லாரையும் ஒட்டு 

                        மொத்தமாய்  தூங்கவைத்துவிட்டது!

                        ஒரு தாலாட்டுக் கூடப் பாடாமல்!