About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Tuesday 18 September 2012

கவிதைகள்-புத்தம் புதிய ஆடை,கடவுள்

                                 புத்தம் புதிய ஆடை 




உன் பழைய  ஆடைகளை
உதிர்த்துவிட்டு  ஏன் பச்சைப்பசேல்
என்ற  புதிய  ஆடைகளைத்                                                 
தேர்ந்தெடுத்தாய்? வரும் வெயில்
காலத்தில் பழைய ஆடைகள் 
வெயில் தாங்காதென்றா ! அல்லது
புது ஆடைகள் வெயிலில்
எதிரொளிக்க கதிரவன்  அதன் அழகில் மயங்கி
தன் வெம்மையைக் குறைக்கத்தானோ                                                    
இப்புது ஆடைகள்!!!   

                             கடவுள்

  




குழந்தை முதல்
பெரியவர் வரை அனைவருக்கும்
சமமான சந்தோஷத்தைத்
தரும் ஒரேக் கடவுள் மலர்களே!

 


                                             

Thursday 13 September 2012

கட்டுரை -உணவு வலை

   

                                         உணவு வலை

  

     இவ்வுலகில் எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன.அவை நம் கண்ணுத்தெரியாத வலையை உண்டுப் பண்ணுகின்றன.    
       உணவு வலையில் முதலாவதாக வருபவை தாவரங்கள்.    அவற்றில் முதலில் வருபவை பாசிகள் மற்றும் பூஜ்ஜைகள். 
                 

1.பாசிகள் பச்சை நிறம்  கொண்டவை.இவை  மிகப்  பழமையானத்  தாவரங்கள் ஆகும். இவை பச்சை, பழுப்பு, சிவப்பு,மற்றும்  நீலப்பச்சை  நிறம்  கொண்டுள்ளன.  இவைகளில் உல்வா, லேமினாரியா, சர்காஸம்  போன்றவை  மனிதர்கள்  மற்றும்  நாய்ப்போன்ற வீட்டு விலங்குகளுக்கும்  நல்ல   உணவாகின்றன. பூஜ்ஜைகளுக்கு பச்சையம் இல்லாததால் அவை  ஒட்டுண்ணிகளாவோ, சாற்றுண்ணிகளாகவோ தன்  வாழ்க்கையை நடத்துகின்றன. பென்சிலியம்நொட்டேட்டம்   என்றப் பூஞ்ஜையிலிருந்து   எதிர் உயிரி   மருந்தான  பென்சிலின்  தயாரிக்கப்படுகிறது.

                               

      2  .         மாஸ் எனப்படும் பிரையோபைட்டுகள் முதன் முதலில் நீரில் இருந்து   நிலத்தில் வாழும்  தகவமைப்பை  பெற்றிருக்கின்றன. நீரிலும்,   நிலத்திலும்  வாழும் இவை நீரின்றி இனப்பெருக்கம் செய்ய இயலாது. இவை கம்பளம் போல் மண்ணைப் போர்த்திக் கொள்வதால் மண்ணிப்பைத் தடுக்கின்றன. உலர்த்தப்பட்ட பீட் மாஸ் மற்றும் ஸ்பாக்கனம் எரிபொருளாக பயன்படுகின்றன.

                                    

  


    3.சாற்றுக் குழாய்க் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழ்பவை பெரணிகளாகும். இவை ஜூராசிக்காலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றன. இவற்றின்   இலைகள்  மிகவும்  அழகாக  உள்ளதால் இவை  அழகுத்தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன.  மார்சிலியா உணவாகப்  பயன்படுகிறது.
       
                                                                                                                                                                                                       

     4.   சைக்கஸ், பைன் போன்றவை தண்டு , இலை வேர் வேறுபாடுகள் உள்ள உடலம். இவை  திறந்த விதைத் தாவரங்கள் ஆகும். இவை  ஜிம்னோஸ்பெர்ம்  என்றத்  தொகுதியின் கீழ் வருபவை  ஆகும். ஜிம்னோஸ்பெர்ம்களில் பைன் ,செங்கட்டை,ஃபிர், போன்றவைகள் மரச்சாமான்கள், பென்சில் மற்றும் தீக்குச்சிகள்  தயாரிக்கப்  பயன்படுகின்றன. அரக்கேரியா (குரங்கின் புதர் ) பசுமை மாறாத  அழகுத்  தாவரங்களாகும்.
                                                                                                                                                                         
   

                       

                                                                                                                                                              
                                                                                    
         .        5.   பூக்களின்  பெரியதொரு  தொகுதியாக   ஆஞ்சியோஸ்பெர்ம்கள்  உள்ளது.
மனித வாழ்விற்கு ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மிக இன்றியமையாதன.உணவு, உடை,மருந்து, மரக்கட்டை,நார்கள் ஆகியவற்றுக்கு   இவையே ஆதாரம்.இவற்றின் கீழ் வரும்  அனைத்து வகையான நெல்,கோதுமை,சோளம் மற்றும் பட்டாணி மற்றும் மா,அவரை போன்ற எல்லா ஒருவிதையிலை இருவிதையிலை தாவரங்களும்   மனித வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதன  ஆகும். இது ஏறக்குறைய 2,60,000 உயிர் வாழ் தாவரங்களைக் கொண்டது.
         தாவரங்களினால் கிடைக்கும்  பூக்கள்  மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வாசனைத் திரவியங்கள்  தயாரிக்கவும் பயன்படுகின்றன.
       காய்கள் மற்றும் கனிகள்  இயற்கை நமக்களித்த பரிசு. ஒவ்வொரு பருவத்திலும்  கிடைக்கக் கூடிய பழங்களை நாம் உண்ணுவதன் மூலம் நோயில்லா வாழ்வை வாழலாம்.
இவ்வாறாக   கீழ்நிலையிலுள்ள பாசிகள் முதல்  பூக்கும் தாவரங்கள்  வரை மனிதனுக்கு பயன் அளிக்கின்றன.



1.மரங்கள்  மாசுகலந்த காற்றினை  சுத்தப்படுத்தி  நல்ல காற்றினை  நமக்கு தருகின்றன.
2.நாம் வெளியிடும் கார்பன் –டை-ஆக்சைடை உறிஞ்சிக் கொள்ளவதால் உலக வெப்பமயமாதல்  குறைக்கப்படுகின்றது.
3.மண் அரிப்பைத் தடுக்கவும், மழை வளம் பெருக்கவும் மரங்களின் பயன் மிக மிக இன்றியமையாதன.
4.மரங்கள் மனிதனுக்கு மட்டுமன்றி பூச்சிகள்,புழுக்களுக்கும் தன் இலையை உணவாகத் தருகின்றன. பறவைகள்  கூடுகட்டி வாழ்வதற்கும், மற்றும் விலங்குகளுக்கும் உணவையும், நிழலையும் தருகின்றன.
5.மனித வாழ்கைக்கு  மருத்துவ குணம் கொண்ட  தாவரங்களின் பயன் சொல்லிமாளாது. சாதாரண சளி ,காய்ச்சலிருந்து  உயிர்க் காக்கும் சஞ்சீவி மருந்து வரை  தாவரங்களின் பயன் சொல்லிமாளாது.

நுண்ணுயிர்களின் பங்கு:

                  


  மனிதனுக்கு வைரஸ், பாக்டீரியா , பூஞ்ஜைகள் பல நோய்களைத் தந்தாலும் அவைகளால்  ஏற்படும் நன்மைகளே அதிகம்.பாக்டீரியாக்கள் நான்கு வடிவங்களில் காணப்படும்.இவை எல்லா இடங்களிலும் காணப்படும்.மனிதனின் தோல் மற்றும் குடல்பகுதியில் எண்ணில்லா பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.அவை பரவ மனிதன் மற்றும் விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகவாகவோ கடத்திகளாக செயல்படுகின்றனர் .                                          

1.     தாவர  வேர்மூண்டுகளில் ,கிளாஸ்டிரிடியம் ,ரைசோம் போன்ற        பாக்டீரியாக்கள் வாயு மண்டலத்திலுள்ள  நைட்ரஜனை மண்ணில்  நிலை நிறுத்தி மண்வளத்தைப் பெருக்குகின்றன. லாக்டோபேசில்லஸ்  லேக்டிஸ் என்ற பாக்டீரியா பாலைத் தயிராக மாற்றுகிறது. மற்றும் தோல் பதனிடும் தொழில்சாலைகளிலும் பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன.
2. சாற்றுண்ணிப் பாக்டீரியாக்கள் மற்றும் பூஜ்ஜைகள் இறந்த தாவர மற்றும் விலங்கு உடல்களைச்   சிதைக்கின்றன .இதன்  விளைவால் துர்நாற்றம் ஏற்பட்டு மனிதனுக்கு ஒரு உயிர் இறந்துப் போயிருக்க கூடும் என்று உணர்த்துகின்றன. எனவே  இவைகள்  இயற்கைத் துப்புரவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாக்டீரியாவிலிருந்து எதிர் உயிரிஉயிரி மருந்து ஸ்டெப்ரப்டோமைசின்  மற்றும் பாசிட்ராசின்   போன்றவை  பெறப்படுகின்றன.  மேலும்  வேளாண்மைத் துறையில்  உயிரியல் கட்டுப்பாட்டிற்கு பேசில்லஸ் துரிஞ்ஞினிசிஸ் என்ற பாக்டீரியா பயன்படுகிறது
   
3. வைரஸ்கள் உயிரியல் ஆய்வுக் கூடக் கருவிகளாக பயன்படுகின்றது.

 நுண்ணுயிர்கள் மனித குலத்திற்கும், தாவரத்திற்கும் பெரும் நன்மைகளைத் தருகின்றன. இவ்வாறாக மனிதன் நுண்ணுயிர்களையும் நுண்ணுயிர்கள்  மனிதன் ,தாவரங்களையும் சார்ந்திருக்கின்றன .மனிதன் ஆடு, மாடுகள் ,கோழிகள், போன்றவற்றை  தன்னுடைய உணவுத் தேவைகளுக்காவும், சமூகத் தேவைகளுக்காவும் சார்ந்துள்ளான்.
பட்டுப்பூச்சி, தேனீக்கள், மண்புழு போன்றவை மனிதனுக்கு கிடைத்த இயற்கைப் பரிசு.

எனவே இதிலிருந்து தாவரங்கள்  –மனிதர்கள்- விலங்குகள் நுண்ணுயிர்கள்  –ஒன்றை ஒன்று சார்ந்து உணவு வலையை உண்டுப் பண்ணுகின்றன. 

உணவுச்சங்கிலி
காட்டில்காணப்படும் ஒரு உணவுவலை







1.மனிதனுக்கு தாவரங்களும்  ,தாவரங்களை  உண்டு வாழும்  புழு,பூச்சிகளுக்கும் , மான், ஆடு,மாடு, முயல் போன்றவற்றுக்கும் உணவாகின்றன.
2. இப்பூச்சிகளையும் ,புழுக்களையும்  தவளைகள் மற்றும் பறவைகள் உணவாக உட்கொள்கின்றன.ஆடு மாடுகள் மனிதனுக்கும், சிங்கம் ,புலி  போன்றவற்றுக்கும் உணவாகின்றன.
3.தவளைகளையும்,எலிகளையும் பாம்புகளும்,பறவைகளும் உணவாக உட்கொள்ளும். பாம்புகளை கீரிகளும்,சில பறவைகளும், கழுகுகளும் உணவாக உட்கொள்கின்றன.
4.கழுகுகளோ, மற்ற உயிர்களோ  இறக்க நேரிடும்போது  நுண்ணுயிர்கள் அவற்றை சிதைத்து  இப்புவியை தூய்மைப்படுத்துகின்றன. இவ்வாறு இயற்கை  எல்லா உயிர்களுக்கு  உணவு கிடைக்கவும், உயிரினங்கள் அளவிற்கு மேல் பெருகிவிடாமல் , அதே சமயம் அடியோடு அழிந்து விடாமல் இருக்கவும்  இயற்கையாக அமைந்த உணவுச் சங்கிலிகளால் ஆன இந்த உணவு  வலை மிகமிக  இன்றியமையாதது ஆகும். இவ் உணவு  வலையானது  தாவரங்களிலிருந்து தொடங்குகின்றது. எனவே  இதன் மூலம் இப்பூமியில் தாவரங்களின் பங்கு எவ்வளவு  இன்றியமையாதது என்பது தெளிவாகிறது. தாவரங்கள் உணவை உண்டு பண்ண சூரியன் துணைப்புரிகின்றார்.அவர் எல்லாவற்றுக்கும்  முதலில் உள்ளார்.
தாவரங்கள் எளிதில்  பெருகிப்  பரவபூச்சிகளும் பறவைகளும் , மனிதர்களும்    இயற்கையாக   எளிதில்    துணைப்புரிகின்றனர். வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ,   எறும்புகள்    பறவைகள்  போன்றவை  அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.  பழங்களை   உண்ணும் பறவைகளின்  எச்சங்களின் மூலம் விதைகள் பரவுகின்றன ,முளைக்கின்றன. இயற்கையாக சில தாவரங்களின் விதைகள் காற்று,நீர் இயற்கைக் காரணிகளால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில் கடத்தப்பட்டு அவை  மரமாவோ ,செடியாகவோ  முளைத்து  இன்னோரு உணவு வலை அங்கு இயற்கையாகத் தோன்றுகின்றன.
 இயற்கையில் அமைந்த இந்த உணவு  வலையை மனிதன்  காப்பாற்றும் பொறுப்பில் இருக்கின்றான். மரங்களை வெட்டுதல்,விலங்குகளை வேட்டையாடுதல்  போன்றவை  இவ்வுணவு வலையை  சீர்குலைக்கும். எனவே மரங்கள், விலங்குகள், பறவைகளையும் கண் எனப் பாதுகாப்பது  நமது கடமையாகும்.எனவே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ல் இயற்றப்பட்டது. இந்தியாவில் 89 தேசியப் பூங்காக்களும், 500க்கும் மேற்பட்ட  சரணாலயங்களும் உள்ளன.














 






Saturday 8 September 2012

கட்டுரை- வாசுதேவ அய்யங்கார் பன்மாடிக்குடில்

                 வாசு தேவ அய்யங்கார் பன்மாடிக்குடில்
திருச்சி  திருவானைக்காவலில்  கல்லணைக்கு   செல்லும்  இருவழிச் சாலைக்கு எதிர்ப்புறம் உள்ள   எங்கள் சி.கே.வி.ஐ என்னும் வாசுதேவ அய்யங்கார்  பன்மாடிக்குடில்  அமைந்துள்ளது. எங்கள் வளாகத்தை  அழகிய மரங்களும் , மாருதி விநாயகர் ஆலயமும் , குழந்தைகள்  விளையாடும் சிறுவர் பூங்காக்களும்  அலங்கரிக்கின்றன.
இங்கு சி.கே.வி.ஐ.  என்னும்     நலச்சங்கம் ஒன்று    அமைக்கப்பட்டு, அதில்  தலைவர் , உபதலைவர்  கொண்ட  ஆறு  முதல் பத்து உறுப்பினரைக் கொண்டக் குழு ஒவ்வொரு வருடமும் இங்குள்ள வளாகவாசிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வளாகத்தின் முன்னேற்றத்திற்கு   அயராது   பாடுபடுகின்றனர்.  மேலும் ,   இங்குள்ள   ஒவ்வொரு பிளாக்கிற்கும் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் . அவர்  அந்த   பிளாக்கின்  குறைகளைத் தீர்ப்பார்.  சி.கே.வி.ஐ நலச்சங்கத்தால் எங்கள் வளாகத்தின் தூய்மைமையை மேம்படுத்த எக்ஸ்னோரா இயக்கமும், இங்குள்ள வீடுகளில் ஏற்படும்   குழாய் ,மின்வேலை  மற்றும் இதர தேவைகளை கவனிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுளனர். மேலும்  வளாகத்தின்  பாதுகாப்பிற்காக இரவு மற்றும் பகல் நேரக் காவலர்கள்  ,  மாதத்தில் ஒரு தடவை ஒவ்வொரு  பிளாக்கின் தண்ணீர்தொட்டியை  தூய்மைப்படுத்த  ஆட்கள்  நியமிக்கப்பட்டும்  வளாகத்தின்  தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
மேலும், எங்கள் வளாகத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ந்து விளையாடும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதில் ஊஞ்சல்களும், சறுக்கி விளையாட சறுக்குமரங்களும்  அமைக்கப்பட்டுள்ளன 

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாதர் சங்கம்
        எங்கள் வளாகத்தில்  பதினைந்துப் பேர்க்கொண்ட ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாதர் சங்கம் சிறப்பாக  செயல்பட்டு வருகின்றது . இவர்கள்  திருச்சியிலுள்ள  சாந்திவன் என்னும் மனம் குன்றியக் குழந்தைகளுகாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பிற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்கின்றனர்.  மேலும்  சென்னையில்  அடையாறு புற்றுநோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட  மாதா டிரஸ்டிற்கு தங்களால் ஆன பொருள் உதவியினை மனம் உவந்து செய்கின்றனர்.  மேலும் மச்சுவாடி ,மற்றும் மனையேறிப்பட்டி போன்ற  இடங்களில் உள்ள குஷ்டநோயாளிகளுக்கு எங்கள் வளாகத்தில் உள்ளோரின் ஒத்துழைப்பாலும் மாதர் சங்கத்தின் மூலமும் ஆடைகள் மற்றும்  பொருள் உதவியையும் செய்கின்றனர் .  அகில இந்திய வானொலிநிலையத்தில் இருந்து வருடா வருடம் எங்கள் அகிலாண்டேஸ்வரி மாதர் சங்கத்தில் உள்ளோரை பங்குப் பெற அழைகின்றனர் . நாடகம், இசைப்பாடல், சமையல் குறிப்பு ,உரையாடல் ,மற்றும் வினாடி-வினா போன்ற  நிகழ்ச்சிகளில் மாதர் சங்கத்தில் உள்ளோர் பங்குக்கொள்கின்றனர்.
         மேலும்  இவர்கள் சார்பாக  ஒவ்வொரு வருடமும்   ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் திருவிளக்குப் பூஜைகள் சிறப்பாக நடைபெறும் .  கோவிலின் அருகில் அமைந்துள்ள புற்றுமாரியம்மனுக்கு மாதப் பொங்கல் வைக்கும்  சிறப்பு நிகழ்ச்சியும் நடைப்பெறும்.
சமூக விழாக்கள்
          எங்கள் வளாகத்தில் அகிலாண்டேஸ்வரி மகளிர் மன்றத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும்.

           இங்குள்ளக் குழந்தைகளுக்கு  ஓவியம், பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும்  மேலும்  போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு  பரிசளித்தும் இவ்விழா  சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் சுதந்திர தினவிழா, குடியரசுத் தினவிழாவையும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
பெண்கள் தினவிழா





                     அகிலாண்டேஸ்வரி மகளிர் மாதர் சங்கத்தின் சார்பாக பெண்கள் தினவிழா ஒவ்வொரு  வருடமும் சிறப்பாக் கொண்டாடப்படும்.
                பெண்கள் தினவிழா  சென்ற வருடம் 16.04.2011  அன்று எங்கள் வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதற்கு  முன்னதாக மார்ச் 13ம் தேதி சிறுவர் ,சிறுமியர்களுக்கும், மகளிருக்கும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் எங்கள் வளாகத்தில் நடைப்பெற்றன.முன்னதாக இதில் சிறுவர் -சிறுமியர்களுக்கு  இசைநாற்காலி, சாக்குஓட்டம், அதிர்ஷ்டசுற்று , நீர்நிரப்புதல், எலுமிச்சை கரண்டி,   அலங்காரம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன.
          பெண்களுக்கு இசை நாற்காலி, பந்து உருட்டுதல், நீர் நிரப்புதல், அதிர்ஷ்டச் சுற்று ,நொண்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

            அனைத்து மகளிர் அமைப்பிக்களின் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் திருமதி ஜென்பகா ராமக்கிருஷ்ணன் அவர்கள் 16.04.2011 அன்று எங்கள் வளாகத்தில் நடைப்பெற்ற பெண்கள் தினவிழாவிற்கு தலைமைத் தாங்கினார். அவர் குத்து விளக்கேற்றி ,மரக்கன்றினை நட்டு பெண்களின் உரிமைப் பற்றி சிறப்பு உரை ஆற்றினார். பின்பு விழாவில் வளாகத்தில் உள்ள பெண்கள் நாடகம்,மற்றும் பட்டிமன்றம் ,போன்றவற்றில் பங்கேற்றனர். சிறுவர் சிறுமிகளின் நடனம் நடந்தது.மார்ச் 13ம் தேதி நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன.மேலும் பெண்கள் தினவிழாஅன்று நடைப்பெற்ற பரிசு குலுக்கலில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு பெண்கள் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
        
ஸ்ரீ மாருதி விநாயகர்   ஆலைய ஆஸ்திக சமாஜம்
           எங்கள் வளாகத்தில் அமைந்துள்ள   இந்த ஸ்ரீ மாருதி விநாயகர் ஆலைய ஆஸ்திக  சமாஜத்தில் மொத்தம் இருபதுப் பேரைக் கொண்டக் குழு ஆன்மீகப் பணிகளை மிகச்  சிறப்பாகச் செய்து வருகின்றனர். இவர்கள் சார்பாக அஷ்டபதி பஜன் கோவில் வளாகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைப்பெறும்.
              மேலும் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் தனுர்மாத பஜனை அதிகாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணிவரை ஸ்ரீமாருதி விநாயகர் ஆலயத்தில்  நடைப்பெறும்.
            அப்பொழுது பஜனை ,திருப்பாவை, திருவெம்பாவை ,தேவாரம் ,திருவாசகம் ,இசைப் பாடல்கள் பாடுதல் போன்றவை நடைப்பெறும் .  தனுர்மாத பஜனையில்  எல்லா நாட்களிலும் பங்கு பெறும்  குழந்தைகளுக்கு பரிசுகள்  அளிக்கப்படும்.
              மேலும் சத்சங்கம் ஒன்று  அமைக்கப்பட்டு இதன் மூலம்  இதன் மூலம்  விஷ்ணு மற்றும் லிதா சகஸ்ரநா பாராயணம் , கந்தர் ஷட்டி கவசம் , அரவிந்தர் தியானம்  (வியாழக்கிழமைகளில்) , மற்றும் அம்மாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அபிராமி அந்தாதி  பாராயண  வழிபாடுளும் நடைப்பெறும்.
ஆன்மீக விழா
       ஆன்மீக விழாவிற்கு  எங்கள் வளாகத்தில்  நடைப்பெற்றுவரும்  ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இங்குள்ள   எங்கள் ஸ்ரீ மாருதி விநாயகர் ஆலயத்தின் ஆஸ்தீக சமாஜத்தின் சார்பாக இதுவரை ஒன்பது வருடங்களாக இந்த மஹோத்ஸவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது . எங்கள் வளாகத்தில் உள்ள அனைவரும் தங்களால் ஆன ஒத்துழைப்பைத் தருவர் .
ஸ்ரீராதாகல்யாண மஹோத்ஸவம்

                                                                                                 
                         

                      
                                                                                                                                  
                                                                                                                                    
                                                                                                                                                                                                                                         
         இந்த மஹோத்ஸவம் ஆனது ஒவ்வொரு வருடமும்  தைமாதத்தின் கடைசிவாரத்திலோ அல்லது மாசி மாதத்தின் முதல் வாரத்திலோ நடைப்பெறும். இதற்கு  முன்னதாக உஞ்சவ்ருத்தி நடைப்பெறும் . பின்பு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஆனது  நான்கு நாட்களாக நடைப்பெற்று  இனிதே முடிவுறும் . முதல் நாள் கணபதி ஹோமத்திலிருந்து துவங்கி இரண்டாம்நாளில் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம், மாலை  அகிலாண்டேஸ்வரி மாதர் சங்க இன்னிசை நிகழ்ச்சி முதலியன  நடைப்பெறும்.
        ஒவ்வொரு வருடமும் மூன்றாம்  நாள்  பிரதான  பிரபல பாகவதரைக் கொண்டு கீதகோவிந்தம் ,அஷ்டபதி பஜன், பின்பு  பஞ்சபதி ,பூஜை போன்றவை காலை  முதல்  பகல் வரை நடத்தப்படும். பின்பு மாலை  அஷ்டபதி பஜன் தொடர்ச்சி, பஞ்சபதி ,பூஜை , திவ்யநாமம், டோலோத்ஸவம் நள்ளிரவு வரை  நடைப்பெறும்.

         நான்காம்  நாள் ஸ்ரீராதா கல்யாணமஹோத்சவம். காலை  சம்பிரதாய உஞ்சவிருத்தி சீர் கொண்டு வருதல் நடைப்பெறும். பின்பு  ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்    நண்பகல் வரை மங்கள ஹாரத்தியுடன் நிறைவடையும். அன்று மதியம் சிறப்பு அன்னதானமும் நடைப்பெறும்.   மேலும் அன்று மாலை ஸ்ரீஆஞ்சனேயர் உத்ஸவத்துடன் ஸ்ரீராதா  கல்யாணமஹோத்சவம்  இனிதே  நிறைவுறும். இந்த முறை எங்கள் வளாகத்தில் நடக்கவிருக்கும் பத்தாவது ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சிஷ்யர் ஸ்ரீ சட்டநாதபாகவதர் அவர்கள் நடத்திக் கொடுக்க இசைந்துள்ளார்கள் என்பதை எங்கள் ஸ்ரீ மாருதி விநாயகர்  ஆலைய ஆஸ்திக சமாஜத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

         இவ்வாறாக எங்கள்  வாசுதேவ அய்யங்கார்  பன்மாடிக்குடில் எல்லாவற்றிலும்  சிறந்து விளங்குகின்றது.