About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Sunday 18 October 2020

 

                                      சிறுகதை_        மணல்

 

அந்த  கடிதத்தை    குமார்  இரண்டாவது   முறையாக   படிக்கும் பொழுது   கடலின்   அலைகள்   சீற்றத்தோடு   அவன்   நெஞ்சில்   மோதியது  போல்  இருந்தது,   ஈரமணலை  எடுத்து   ஆத்திரத்தோடு   வீசினான்.  என்ன  தம்பி! 

  காதல்   தோல்வியா?   என்றான்   மீனவன்   கையில்  வலையோடு   நின்றிருந்தான்.  அமாம் !    என்றான்   வயற்றெரிச்சலோடு!   தம்பி !  துக்கமும்   இந்த   ஈரமணல்  மாதிரிதான்   அதப்பத்தி  நினைக்கநினைக்கநம்ம   மனசில   ஒட்டிக்கும்!  துக்கத்த  விடுங்க  தம்பி ! அப்பத்தான்   அது   இந்த  காஞ்ச   மணல்   மாதிரி   நம்ம  மனசில  ஒட்டாது!   என்றான் .  அந்த  மீனவன் சொன்னது   குமாருக்கு  அப்பொழுது  ஒரு  ஆறுதலைத்  தர,  வீட்டை  நோக்கி  நடந்தான்.

No comments:

Post a Comment